மக்களவையில் பரூக் அப்துல்லா உரையாற்றியபோது காங். எம்பி சசிதரூர் சுப்ரியா சுலேவுடன் சுவாரசியமாக பேசும் வீடியோ வைரல்.!

0 2359

மக்களவையில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்க, காங்கிரஸ் கட்சியின் எம்பியான சசி தரூர் தமக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த பெண் எம்பி சுப்ரியா சுலேவுடன் சுவாரசியமாக எதையோ பேசிக் கொண்டிருந்தார். அப்போது தேசிய மாநாட்டுக் கட்சி உறுப்பினரான பரூக் அப்துல்லா, தொடர்ந்து தனது உரையை நிகழ்த்தி கொண்டிருந்தார்.

இந்த வீடியோ காட்சி வைரலாகப் பரவியதையடுத்து அது குறித்து சசி தரூர் விளக்கம் அளித்துள்ளார். மக்கள் எதையாவது சொல்வார்கள் என்று பழைய இந்திப் படப் பாடலை மேற்கோள் காட்டிய அவர் தமது பதிவில், சுப்ரியா சுலேவை டேக் செய்து மறுப்பு வெளியிட்டுள்ளார்.

சுப்ரியா அடுத்துப் பேசவிருந்ததால் விவாதத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் மெல்லிய குரலில் அரசின் கொள்கை குறித்து தம்மிடம் கருத்து கேட்டதாக சசி தரூர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments