நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை, கன்னத்தில் அறைந்த சம்பவம் தொடர்பாக நடிகர் வில் ஸ்மித்திடம் இன்று விசாரணை.!

0 4364

ஆஸ்கர் விருது விழாவில் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை, கன்னத்தில் அறைந்த சம்பவம் தொடர்பாக நடிகர் வில் ஸ்மித் மீது இன்று விசாரணை நடத்த உள்ளதாக ஆஸ்கர் அகாடமி அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆஸ்கர் அமைப்பின் விருது விழாக்களில் கலந்து கொள்ள நடிகர் வில் ஸ்மித்துக்குத் தடை செய்வதா உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை ஆலோசிக்க உள்ளதாக அமைப்பின் தலைவர் டேவிட் ரூபின் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் விசாரணை கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென இன்று அமைப்பு விசாரிக்கிறது. தனது மனைவி குறித்து கருத்து தெரிவித்த நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்த விவகாரத்தில், ஆஸ்கர் அமைப்பில் வகித்த உறுப்பினர் பதவியை நடிகர் வில்ஸ்மித் கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments