கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.. பல் மருத்துவர் கைது

0 2508
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.. பல் மருத்துவர் கைது

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பல் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

சமாதானபுரம் பகுதியில் பல் மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவர் சுகுமார் அங்கு செய்முறை பயிற்சி பயின்று வந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி மற்றும் அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சுகுமார் மீது பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டது.

இதனிடையே சுகுமாரை கைது செய்த போலீசார் நேற்றிரவு நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments