தெய்வங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் அளவுக்கு நல்லாட்சி நடைபெறுகிறது - அமைச்சர் சேகர்பாபு

0 2133
தெய்வங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் அளவுக்கு நல்லாட்சி நடைபெறுகிறது - அமைச்சர் சேகர்பாபு

தெய்வங்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும் அளவுக்கு திமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருவதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினா - விடை நேரத்தில், குளித்தலை தொகுதி, அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடத்த அரசு ஆவன செய்யுமா எனச் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் வினவினார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, ஒன்றேகால் கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், தொல்லியல் துறை அனுமதி பெற்று விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments