இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண குழு அமைப்பு.. அதிபர் நியமித்துள்ள வல்லுநர் குழுவில் 3 பேர் தமிழர்கள்

0 2088
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண குழு அமைப்பு.. அதிபர் நியமித்துள்ள வல்லுநர் குழுவில் 3 பேர் தமிழர்கள்

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை ஆராய அந்நாட்டு அதிபர் நியமித்துள்ள குழுவில் தமிழர்கள் மூவர் இடம்பெற்றுள்ளனர்.

கடன் நெருக்கடிக்குத் தீர்வுகண்டு, நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய மீட்சிக்கான வழிகாட்டல்களை வழங்கும் நோக்கில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார வல்லுநர் சாந்தா தேவராஜன், பன்னாட்டுப் பண நிதியத்தின் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் சர்மினி கூரே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments