மும்பையில் ஒருவருக்கு எக்ஸ்.இ வகைத் தொற்று ஏற்பட்டதாக வெளியான தகவலுக்கு அதிகாரிகள் மறுப்பு

0 2330
மும்பையில் ஒருவருக்கு எக்ஸ்.இ வகைத் தொற்று ஏற்பட்டதாக வெளியான தகவலுக்கு அதிகாரிகள் மறுப்பு

ஒமைக்ரான் வைரசின் புதிய வகை துணை திரிபான எக்ஸ்.இ வகைத் தொற்று மும்பையில் ஒருவருக்கு கண்டறியப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அதிகாரிகள் அதனை மறுத்துள்ளனர்.

மரபணு பகுப்பாய்வில் அந்த நபருக்கு எஸ்இ தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். முதன் முதலில் எக்ஸ்இ வைரஸ் பிரிட்டனில் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து தாய்லாந்து, நியூசிலாந்திலும் எக்ஸ்இ வகை தொற்று கண்டறியப்பட்டது. முதல் கட்ட ஆய்வின்படி, எக்ஸ்இ வைரஸ் ஒமைக்ரானை விட 10 சதவீதம் அதிகமாக தொற்றும் தன்மை கொண்டது என்பது தெரியவந்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments