கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக அரசியல் பிரமுகர் மீது புகார் அளித்த கோவில் பூசாரி மீது தாக்குதல்

0 2522
கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக அரசியல் பிரமுகர் மீது புகார் அளித்த கோவில் பூசாரி மீது தாக்குதல்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கோவில் நில ஆக்கிரமிப்பு குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்த ஆத்திரத்தில், கோவில் பூசாரியை அரசியல் பிரமுகர் கூட்டாளிகளுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

பையனூர் கிராமத்தில் உள்ள எட்டீஸ்வரர் கோவிலை மூர்த்தி என்பவர் நிர்வகித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிலத்தை அளவீடு செய்வதற்காக வந்துள்ளனர்.

அப்போது கோவிலுக்கு சொந்தமான 41 சென்ட் நிலத்தை அரசியல் பிரமுகர் வெங்கடேசன் என்பவர் ஆக்கிரமித்திருப்பதாக மூர்த்தி, அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த வெங்கடேசன், தனது கூட்டாளிகளுடன் வந்து கோவிலில் வைத்து மூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த மூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட வெங்கடேசன் அதிமுக பிரமுகர் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments