சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதற்காக உணவகத்தின் மீது காலி மதுபாட்டில்களை வீசி தாக்குதல் நடத்திய இளைஞர்கள்

0 2255

கோவையில், சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதற்காக மதுபோதையில் உணவகத்தின் மீது காலி மதுபாட்டில்களை வீசி தாக்குதல் நடத்திய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

கே.என்.ஜி புதூரில் உள்ள உணவகத்திற்கு கடந்த 4ம் தேதி இரவு சென்ற பிரதீப் என்பவன், 520 ரூபாய்க்கு உணவருந்திவிட்டு 500 ரூபாய் பணம் செலுத்தியிருக்கிறான்.

மீதி பணத்தை கேட்ட காசாளரிடம் மதுபோதையில் இருந்த பிரதீப் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த நிலையில், கடை மூடும் நேரத்தில் தனது கூட்டாளிகளுடன் வந்த பிரதீப், காலி மதுபாட்டில்களை உணவகத்திற்குள் வீசி தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது.

உணவகத்தின் வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியையும் அடித்து நொறுக்கியுள்ளனர். போலீசில் காசாளர் அளித்த புகாரின் பேரில் பிரதீப், ஸ்ரீ கிருஷ்ணேஷ்வரன் மற்றும் அஜித் குமார் ஆகிய இளைஞர்களை கைது செய்த போலீசார், தலைமறைவான 6 பேரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments