நாய்கள் துரத்தியதற்கு அஞ்சி ஓட்டம்பிடித்து இறைச்சிக்கடைக்குள் புகுந்து பதுங்கியிருந்த மான்

0 1508

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உப்பட்டி பகுதியில் சாலையில் திரிந்து கொண்டிருந்த மான், நாய்கள் துரத்தியதற்கு அஞ்சி அங்கிருந்த இறைச்சிக்கடைக்குள் தஞ்சம் புகுந்தது.

வனப்பகுதியில் வறட்சி நிலவி வருவதால் தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் வந்த ஒரு மான், குடியிருப்புகள் நிறைந்த சாலை வழியே சுற்றிக் கொண்டிருந்தது.

அப்போது நாய்கள் துரத்தியதால் வேகமாக ஓட்டம் பிடித்த அந்த மான் அப்பகுதியில் இருந்த இறைச்சிக்கடைக்குள் சென்று பதுங்கிக்கொண்டு வெளியே வர மறுத்தது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அந்த மானை மீட்டு வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments