கோயம்புத்தூரில் உட்கட்சி பூசலால் பாஜக நெசவாளர் பிரிவு செயலாளாருக்கு கத்திக் குத்து.. பாஜக பிரமுகர்கள் 2 பேர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு.!

0 2070

கோயம்புத்தூரில் உட்கட்சி பூசல் காரணமாக, பாஜக நெசவாளர் பிரிவு செயலாளாரை தாக்கி கத்தியால் குத்திய விவகாரத்தில் பாஜக பிரமுகர்கள் இருவர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், பாஜக நெசவாளர் பிரிவு செயலாளராக உள்ளார். போட்டோ ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார். கடந்த 30ஆம் தேதி இவரது ஸ்டூடியோவுக்கு சென்ற பாஜகவைச் சேர்ந்த கார்த்திக், முத்துக்குட்டி மற்றும் அவர்களது நண்பர்கள் இருவர், பாஜக உட்கட்சி தேர்தலில் போட்டியிடக் கூடாது எனக்கூறி ஜெயக்குமாரை சரமாரியாக தாக்கியதோடு அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகின.ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் கார்த்திக், முத்துகுட்டி உட்பட 4 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments