2023ஆம் ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர் மாநாடு - முதலமைச்சர் அறிவிப்பு

0 1319

2023ஆம் ஆண்டு இறுதியில் தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்றும், அதன்மூலம் மேலும் அதிகமான முதலீடுகள் திரட்டப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகச் சட்டப்பேரவையில் தொழில் முதலீடுகள் மற்றும் புரிந்துணர்வு உடன்பாடுகள் குறித்து 110விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, துபாய் பயணத்தில் 14 புரிந்துணர்வு உடன்பாடுகள் மூலம், 6100 கோடி ரூபாய் முதலீட்டுக்கும், 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக்கும் வழிசெய்துள்ளதாகத் தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 68 ஆயிரத்து 375 கோடி ரூபாய் முதலீடும், 2 இலட்சத்து ஐயாயிரத்து 802 பேருக்கு வேலைவாய்ப்பும் உருவாகும் வகையில் 130 புரிந்துணர்வு உடன்பாடு செய்துகொண்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments