ராணிப்பேட்டையில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி சாலையை கடக்க முயன்ற பசு மாடுகளின் மீது மோதி விபத்து.!

0 2404

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி, சாலையை கடக்க முயன்ற பசு மாடுகளின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

சென்னையிலிருந்து ராணிப்பேட்டை நோக்கி பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கொண்டாபுரம் பகுதியில் நெடுஞ்சாலையை கடக்க முயன்ற பசு மாடுகளின் மீது மோதியது.

இதில், லாரிக்கு அடியில் சிக்கிய பசு மாடு சம்பவ இடத்தில் உயிரிழந்தது.விபத்துக்குள்ளான லாரியிலிருந்து 20 ஆயிரம் லிட்டர்  டீசல் மற்றும் பெட்ரோல்  சாலையில் ஆபத்தான முறையில் வெளியேறியதால் தீ பற்றும் அபாயம் ஏற்பட்டது.

இது பற்றி தகவலறிந்து வந்த தீயணைப்புதுறையினர் லாரியில் தீ பற்றாமல் இருக்க ரசாயன நுறைக்கலவையை தெளித்து பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments