பேரிடர் நேரங்களில் அரசே மக்களை காப்பாற்ற வேண்டும்.. தவறும் பட்சத்தில் நீதிமன்றம் நடவடிக்கைகளை எடுக்க உரிமை உள்ளது - உயர்நீதிமன்ற கிளை

0 1460
பேரிடர் நேரங்களில் அரசே மக்களை காப்பாற்ற வேண்டும்.. தவறும் பட்சத்தில் நீதிமன்றம் நடவடிக்கைகளை எடுக்க உரிமை உள்ளது - உயர்நீதிமன்ற கிளை

கொரோனா ஊரடங்கு காரணமாக நாகர்கோவில் மாநகராட்சி கடைகளின் 2020ஆம் ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான வாடகையை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்ற கிளையின் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவினை ரத்து செய்யக்கோரி நாகர்கோவில் மாநகராட்சி சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள், கொரோனா ஊரடங்கு இருந்தபோது மக்கள் யாரும் வெளியே வர முடியாத சூழ்நிலை இருந்ததாகவும், இதுபோன்ற நேரத்தில் அரசு தான் மக்களை காப்பாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை உறுதிசெய்தும், நாகர்கோவில் மாநகராட்சி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments