காவல்நிலையங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்க நடவடிக்கை.. காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை

0 1883
காவல்நிலையங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்க நடவடிக்கை.. காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை

நாளை முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், காவல்நிலையத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பெண்கள், சிறுவர் - சிறுமியர்களை எக்காரணத்திற்காகவும் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து வரக்கூடாது எனவும், முக்கிய வழக்குகளில் கைதாகும் நபர்கள், பழைய குற்றவாளிகள் உள்ளிட்டோரிடம் உடனடியாக விசாரணை நடத்தி  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments