சொத்து வரி உயர்வு குறித்த முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுபரிசீலனை செய்வார் - துரை வைகோ

0 5318
சொத்து வரி உயர்வு குறித்த முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுபரிசீலனை செய்வார் - துரை வைகோ

தமிழகத்தில், சொத்து வரி உயர்வு குறித்த முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுபரிசீலனை செய்வார் என மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்ம் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு நிதியுதவி அளிக்கும் இந்திய அரசு, அதனை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு தமிழக மீனவர்களுக்கு இடையூறு செய்யமல் இருக்குமாறு அந்நாட்டு அரசை வலியுறுத்த வேண்டும் என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments