அதிக பொருட்களை எடுத்து செல்லும் திறன் இந்தியர்களுக்கு மட்டுமே உள்ளது ; வைரலாகும் ஆனந்த் மகிந்திராவின் டுவிட்

0 2533

இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவர் அதிக பாரத்தை சுமந்து செல்வது போன்ற புகைப்படத்தை பகிர்ந்த தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, அதிகளவிலான பொருட்களை எவ்வாறு எடுத்துச் செல்வது என்ற திறன் இந்தியர்களுக்கு மட்டுமே உள்ளதாக தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் வைரலாகும் படம், வீடியோ போன்றவற்றை ஆனந்த் மகிந்திரா டுவிட்டர் கணக்கில் அதிகம் பகிர்வார். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அதிக நாற்காலிகளையும், முன்புறம் பாய்களையும் அடுக்கி கொண்டு செல்லும் புகைப்படத்தை சுட்டிக்காட்டிய அவர், இதனால் தான் இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் உற்பத்தி அதிகமாக இருப்பதாக கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments