கஞ்சாவுக்கு அடிமையான மகனை திருத்த கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவிய தாயின் வீடியோ வைரல்

0 1705

தெலுங்கானாவில் கஞ்சாவுக்கு அடிமையான மகனை காங்கிரீட் தூணில் கட்டிவைத்து, கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவி கதறவிட்ட தாயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொத்தடா என்ற கிராமத்தைச் சேர்ந்த 15 வயதான அந்தச் சிறுவன், கஞ்சா போதைக்கு அடிமையாகி பள்ளி செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளான். நாள் முழுவதும் கஞ்சா போதையில் இருக்கும் தன்னுடைய மகனை திருத்த அவனுடைய தாய் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தன.

போலீசின் உதவியை தாய் நாடிய நிலையில், அவர்களும் பலமுறை சிறுவனை அழைத்து தங்கள் பாணியில் அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்துள்ளனர். அப்படியும் சிறுவன் திருந்தாதால் விரக்தியடைந்த தாய், அவனை வீட்டு வாசலில் உள்ள காங்கிரீட் தூண் ஒன்றில் கட்டிவைத்து வெளுக்கத் தொடங்கினார்.

இனி கஞ்சா பயன்படுத்த மாட்டேன் என உறுதி கொடுக்குமாறு அவர் கேட்ட நிலையில், சிறுவன் தயங்கியதால், அவனுடைய கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி கதறவிட்டார்.

தாயின் அதிரடி நடவடிக்கையால் துடிதுடித்த சிறுவன் வேறு வழியின்றி இனி கஞ்சா பயன்படுத்த மாட்டேன் என ஒப்புக் கொண்டான். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள நிலையில் சூரியாபேட்டை போலீசார் விரைந்து சென்று தாய், மகன் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்துகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments