ஆப்கானில் பாப்பி செடி சாகுபடிக்குத் தடை - மீறினால் கடும் நடவடிக்கை

0 3985
ஆப்கானிஸ்தானில் அபின், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் பாப்பி செடிகளை சாகுபடி செய்ய தாலிபான் அரசு தடை விதித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அபின், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் பாப்பி  செடிகளை சாகுபடி செய்ய தாலிபான் அரசு தடை விதித்துள்ளது.

நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால் அங்குள்ள விவசாயிகள் கோதுமைக்கு பதிலாக அதிக லாபம் ஈட்டக்கூடிய பாப்பி செடிகளை சாகுபடி செய்து வருகின்றனர்.

பாப்பி செடிகள் மூலம் தயாரிக்கப்படும் போதை பொருட்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதால் அவற்றை சாகுபடி செய்ய தடை விதிக்குமாறு உலக நாடுகள் கோரிக்கை வைத்தன.

தாலிபான் அரசு மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச சமூகத்தின் நன்மதிப்பை பெறுவதற்காக போதைபொருட்கள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதித்து தாலிபான் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சாதா உத்தரவிட்டுள்ளார். மீறுவோர் ஷரியா சட்டத்தின் படி தண்டிக்கப்படுவர் என அவர் எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments