காசி விசுவநாதர் கோவிலில் நேபாளப் பிரதமர் வழிபாடு.. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்பு

0 1912
நேபாளப் பிரதமர் சேர் பகதூர் தியுபா உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

நேபாளப் பிரதமர் சேர் பகதூர் தியுபா உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

இந்தியாவுக்குச் சுற்றுப் பயணமாக வந்துள்ள நேபாளப் பிரதமரும் அவர் மனைவியும் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு விமானத்தில் சென்றனர். அவர்களை உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். வாரணாசிக்குச் சென்ற அவர்கள் முதலில் கால பைரவர் கோவிலில் வழிபாடு நடத்தினர்.

காசி விசுவநாதர் கோவிலில் நேபாளப் பிரதமரும் அவர் மனைவியும் வழிபாடு நடத்தினர்.

தனது பயணம் பற்றி பேட்டியளித்த நேபாளப் பிரதமரின் மனைவி அர்சு ராணா, தான் ஐந்தாண்டுக்கு முன் வந்தபோது இருந்ததைவிட வாரணாசி நகரம் பெரும் மாற்றம் கண்டுள்ளதாகத் தெரிவித்தார். தங்களுக்குச் சிறப்பான வரவேற்பளித்த பிரதமருக்கும் முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments