சென்னைக்கு அருகே நிலநடுக்கம்!

0 2676

ஆந்திர மாநிலம் நெல்லூரில் நள்ளிரவில் மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பதியில் இருந்து வடகிழக்கே 85 கிலோ மீட்டர் தொலைவில் நள்ளிரவு 1.10 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் நிலத்திற்கு அடியில் 20 அடி ஆழத்தில் உருவானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளிவரவில்லை. சென்னையில் இருந்து 175 கிலோ மீட்டர் தொலைவிலும், வேலூரில் இருந்து வடக்கு வடகிழக்கு திசையில் 168 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நெல்லூரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னையிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments