தடகள வீராங்கனை சமீஹா பர்வீனுக்கு 2 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

0 5549
தடகள வீராங்கனை சமீஹா பர்வீனுக்கு 2 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை சமீஹா பர்வீனுக்கு 2 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்த சமீஹா பர்வீன் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான காதுகேளாதோருக்கான தடகளப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவரை மேலும் ஊக்குவிப்பதற்காக 2 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு போலந்தில் நடைபெற்ற உலக காது கேளாதோருக்கானத் தடகளப் போட்டியில் பங்கேற்ற சமீஹா பர்வீன், மணிகண்டன் மற்றும் சுதனுக்கு தலா 30,000 ரூபாய் வழங்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments