மின்கம்பி அறுந்து விழுந்ததில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண் கூலித்தொழிலாளி பலி

0 1935
மின்கம்பி அறுந்து விழுந்ததில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண் கூலித்தொழிலாளி பலி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண் கூலித்தொழிலாளி மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காட்டூர் கொத்தமங்கலத்தை சேர்ந்த ஜானகி என்ற 52 வயதுடைய பெண், அதே பகுதியில் வயலில் கூலி வேலை செய்து வந்தார். சனிக்கிழமையன்று, வயலில் நெல் அறுவடை பணிகளில் ஈடுபட்டிருந்த அவர் மீது மேலே தாழ்வாக தொங்கிக்கொண்டிருந்த அலுமினிய மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த லால்குடி போலீசார் ஜானகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, மின் கம்பி அறுந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments