பைக் ரேசில் ஈடுபட்ட மேலும் 3 பேருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் வார்டு பாய்களுக்கு உதவிபுரிய நீதிமன்றம் உத்தரவு

0 2437
பைக் ரேசில் ஈடுபட்ட மேலும் 3 பேருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் வார்டு பாய்களுக்கு உதவிபுரிய நீதிமன்றம் உத்தரவு

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட புகாரில் கைது செய்யப்பட்ட மேலும் மூவரும் ஸ்டான்லி மருத்துவமனை விபத்து அவசர சிகிச்சை பிரிவில் வார்டு பாய்களுக்கு உதவியாக பணியாற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த 4 இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக கைதான நிலையில், அவர்களில் மூவர் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி, அவர்களுக்கு ஜாமீன் வழங்கியதுடன் ஸ்டான்லி மருத்துவமனையில் ஒரு மாதம் பணியாற்றவும் உத்தரவிடப்பட்டது.

வழக்கில் ஏற்கனவே ஜாமீன் பெற்ற பிரவீன் என்பவர் அந்த மருத்துவமனையில் பணியாற்றி, அது குறித்து டீனுக்கு அறிக்கை சமர்பிக்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளையே, இந்த மூவரும் பின்பற்ற முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments