தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் - அரசு தலைமை காஜியார்

0 1728
தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் - அரசு தலைமை காஜியார்

தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் என அரசு தலைமை காஜியார் அறிவித்துள்ளார்.

ரமலான் நோன்புக்கான பிறை தென்பட்டதை அடுத்து நாளை முதல் நோன்பு கடைப்பிடிக்கப்படும் என காஜியார் சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா, குவைத் போன்ற வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் நோன்புகாலம் தொடங்கிய நிலையில், தமிழகத்தில் நாளை தொடங்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப்பிடித்து, ரமலான் மாத இறுதியில் இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments