தென்காசியில் போலீசாரால் தாக்கப்பட்ட விவசாயிக்கு ரூ.2.50 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு.!

0 2117

தென்காசி மாவட்டத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட விவசாயிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடையம் அருகே உள்ள கருத்தப்பிள்ளையூரைச் சேர்ந்த செபஸ்டியன் என்ற விவசாயி, விசாரணைக்கு அழைத்து செல்வதாகக் கூறி காவல்நிலையத்தில் அடித்து துன்புறுத்தியதாக மாநில மனித உரிமை ஆணையத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அதனை விசாரித்த ஆணையம், மனுதாரருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும், இழப்பீட்டு தொகையை உதவி ஆய்வாளர்கள் செல்வராஜ், எட்வின் உள்ளிட்டோரிடம் வசூலிக்கவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவும் ஆணையம் கட்டளை இட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments