அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் 3 பதக்கங்களை வென்ற கோவையை சேர்ந்த கல்லூரி மாணவி.! 

0 3918

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற கோவையை சேர்ந்த கல்லூரி மாணவி 3 பதக்கங்களை வென்றுள்ளார்.

தேசிய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற போட்டியில் தமிழக அணியில் நெய்வேலி, சென்னை, கோவையை சேர்ந்த 5 மாணவிகள் குழுவினர் பங்கேற்றிருந்தனர்.

அவர்களில் கோவை தனியார் கல்லூரி மாணவி வைஷ்ணவி, சீனியர் தனிநபர் ஆர்ட்டிஸ்டிக் போட்டி மற்றும் பாரம்பரிய யோகா போட்டியில் தலா ஒரு தங்கப்பதக்கமும்,  குழு போட்டியில் ஒரு வெள்ளிப்பதக்கமும் வென்றார். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments