நெல்லையில் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ..!

0 1869

நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.

ஆவரைகுளம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் வள்ளியூர் நோக்கி தனது இண்டிகா காரில் சென்றுக் கொண்டிருந்தார்.

ஆவரைகுளம் நான்கு வழிச்சாலையில் சென்ற போது, காரின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வந்ததைக் கண்டு சுதாரித்துக் கொண்ட அவர், காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கியதாக கூறப்படும் நிலையில், சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்தது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதற்குள்ளாக கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments