அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து - 5 வயது சிறுவன் காயம்

0 2425
அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து

திருவள்ளூர் மாவட்டம் பூனிமாங்காடு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்த விபத்தில், அங்கு தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் காயமடைந்தார்.

சுமார் 20 ஆண்டுகள் பழமையான இந்த அங்கன் வாடி மையத்தின் கட்டிடம் சிதிலமடைந்திருந்த நிலையில் இருந்துள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வரும் நிலையில், பிற்பகலில் குழந்தைகள் அனைவரும் உணவருந்துவதற்காக வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மூர்த்தி - ராஜேஷ்வரி தம்பதியின் 5 வயதான மகன் விமல்ராஜ் மட்டும் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த போது, மேற்கூரையின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்துள்ளது.

இதில் தலையில் காயமடைந்த சிறுவன், திருத்தணி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments