கேரளாவில் மாணவ, மாணவியருடன் இணைந்து நடனம் ஆடிய மாவட்ட ஆட்சியரின் வீடியோ இணையதளத்தில் வைரல்.!

0 3107

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் மாணவ, மாணவியருடன் இணைந்து நடனம் ஆடிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.

அந்த மாவட்ட ஆட்சியரான திவ்யா எஸ் ஐயர் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் கலைவிழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை பார்வையிட சென்றார். அப்போது அங்கு மாணவ, மாணவியர் நடன நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களை சந்தித்த ஆட்சியர், ஒத்திகை குறித்து கேட்டறிந்தார். அப்போது தங்களுடன் இணைந்த நடனமாடுமாறு மாணவிகள் விடுத்த கோரிக்கையை ஏற்ற திவ்யா எஸ் ஐயர், நடனமாடினார்.

இந்த காட்சிகளை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments