பரனூர் சுங்கச்சாவடி ஊழியரை பெண் ஒருவர் தாக்கிய வீடியோ இணையதளத்தில் வைரல்.!

0 2538

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் பாஸ்டாக் மூலம் பணம் செலுத்த முடியாததால், இரு மடங்கு கட்டணம் செலுத்தச் சொன்ன ஆத்திரத்தில் பெண் ஒருவர் சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

நேற்றிரவு பரனூர் சுங்கச்சாவடிக்கு வந்த காருக்கு 55 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. காரை ஓட்டி வந்தவர் பாஸ்டாக் மூலம் பணம் செலுத்த முயன்ற நிலையில், அதில் போதிய பணம் இல்லாததால் இருமடங்கு கட்டணம் செலுத்திவிட்டு காரை எடுத்துச் செல்லுமாறு ஊழியர் கூறியதாக சொல்லப்படுகிறது.

இருமடங்கு கட்டணம் செலுத்த சொன்னதால் ஆத்திரமடைந்த காரில் வந்த நபர்கள், ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், காரில் வந்த பெண் ஒருவர் சுங்கச்சாவடி ஊழியரை கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதற்கிடையில், அந்த பெண்ணுடன் வந்த உறவினர் சுங்கச்சாவடியின் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளார். சுங்கச்சாவடியில் இருந்த பிற ஊழியர்கள் எடுத்த இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments