கவுன்சிலர்களுக்கான அதிகாரத்தை குடும்ப உறுப்பினர்கள் தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை மாநகராட்சி மேயர் பிரியா

0 1931
கவுன்சிலர்களுக்கான அதிகாரத்தை குடும்ப உறுப்பினர்கள் தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்

கவுன்சிலர்களுக்கான அதிகாரத்தை குடும்ப உறுப்பினர்கள் தவறாக பயன்படுத்தினால், அவர்கள் மீது கண்டிப்பாக திமுக தலைமை நடவடிக்கை எடுக்கும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாநகராட்சி அலுவலகத்தில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை தொடர்பான ஆய்வக கருத்தரங்கை துவக்கி வைத்த அவரிடம், பெண் கவுன்சிலர்களின் அதிகாரத்தை அவர்களின் கணவர்களோ, குடும்ப உறுப்பினர்களோ தவறாக பயன்படுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

தொடர்ந்து பேசிய அவர், சென்னை மாநகராட்சியில் தெருவிளக்கு இல்லாத பகுதிகளில் தெருவிளக்கு அமைக்க 69கோடி ரூபாயும், பொது இடங்களில் இலவச கழிப்பறைகள் அமைக்க 33 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments