ஒரே முறையில் ரூ.12,450 கோடி கடனைத் திருப்பிச் செலுத்திய சபூர்ஜி பலோஞ்சி கம்பெனி

0 3508

மும்பையைச் சேர்ந்த சபூர்ஜி பலோஞ்சி குழுமம் ஒரே முறையில் 12 ஆயிரத்து 450 கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தியுள்ளது.

டாட்டா குழுமத்தில் 18 புள்ளி 7 விழுக்காடு பங்குகளைக் கொண்டுள்ள சபூர்ஜி பலோஞ்சி குழுமம் கட்டுமானம், கப்பல் போக்குவரத்து, மின்னுற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களைச் செய்து வருகிறது.

கொரோனா சூழலில் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டதால் இந்நிறுவனம் கடன் சுமையால் தத்தளித்தது. இப்போது பொறியியல், கட்டுமானப் பணிகள் வேகம்பெற்றுள்ளன.

இந்நிலையில் பல்வேறு வங்கிகள் உள்ளிட்ட 22 நிறுவனங்களுக்கு மொத்தம் 12 ஆயிரத்து 450 கோடி ரூபாயை ஒரே முறை கடன் தீர்வாகத் திருப்பிக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இன்னும் 3600 கோடி ரூபாய் மட்டுமே கடன் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments