திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து ரக நூல் விலை கிலோவிற்கு ரூ.30வரை உயர்வு

0 2424

திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு மாதத்திற்கான நூல் விலை கிலோவிற்கு 30 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் பஞ்சு விலைக்கு ஏற்ப நூல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் நூல் விலையில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நடப்பு மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் வெளியிட்டுள்ளன.

அதில் அனைத்து ரக நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்த்தப்பட்டு ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் 363 ரூபாய்க்கும், 24-ம் நம்பர் நூல் 375 ரூபாய்க்கும், 40-ம் நம்பர் நூல்  415 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments