மத்திய பிரதேசத்தில், இரண்டு தலை, மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை

0 2716

மத்திய பிரதேசத்தில் இரண்டு தலைகள் மற்றும் மூன்று கைகளுடன் பிறந்த ஆண் குழந்தையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ரட்லம் மாவட்டத்தை சேர்ந்த ஷஹீன் (Shaheen) என்ற அந்த கர்ப்பிணிக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அவருக்கு 2 தலைகள் மற்றும் 3 கைகளுடன் குழந்தை பிறந்தது.

குழந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை காப்பாற்ற வாய்ப்புள்ளதால், இந்தூர் நகரில் உள்ள மருத்துவமனைக்கு அந்த குழந்தை அழைத்து செல்லப்பட்டது.

இவ்வாறு பிறக்கும் 60 சதவீத குழந்தைகள் 48 மணி நேரத்துக்குள் உயிரிழந்து விடுவதால், அந்த குழந்தையைத் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments