ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் - விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்

0 5273
ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும்

சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் சதுரங்க போட்டி இந்த ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை தமிழகத்தில் நடைபெறவுள்ளதாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் நிர்வாகிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மகாபலிபுரத்தில் நடக்கவுள்ள இந்த போட்டியில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments