மாநிலங்களவையில், 72 எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவு.. பிரியாவிடை அளித்தார் பிரதமர் மோடி..

0 2982
மாநிலங்களவையில் ஓய்வுபெறும் 72 உறுப்பினர்களுக்குப் பிரியாவிடை அளித்து உரையாற்றிய பிரதமர் மோடி, அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து குழுப் படம் எடுத்துக் கொண்டார்.

மாநிலங்களவையில் ஓய்வுபெறும் 72 உறுப்பினர்களுக்குப் பிரியாவிடை அளித்து உரையாற்றிய பிரதமர் மோடி, அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து குழுப் படம் எடுத்துக் கொண்டார்.

மாநிலங்களவையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டாண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் நிறைவடையும். அவ்வாறு ஆறாண்டுப் பதவிக்காலம் நிறைவடையும் 72 உறுப்பினர்களுக்கு இன்று பிரியாவிடை அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய பிரதமர் மோடி, மாநிலங்களவை உறுப்பினர்கள் பரந்த அனுபவம் உடையவர்கள் என்றும், சில நேரங்களில் கல்வியறிவைவிட அனுபவ அறிவு ஆற்றல் வாய்ந்ததாகத் திகழ்வதாகவும் குறிப்பிட்டார்.

ஓய்வுபெறும் உறுப்பினர்கள் மீண்டும் தேர்வாகி அவைக்கு வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். உறுப்பினர்களின் அனுபவம் அவையின் வாயிலாக நாடு முழுமைக்கும் பயன்பட வேண்டும் எனத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments