சேலம் : முன்னாள் ராணுவ வீரர் நடத்தி வரும் ஆவின் பாலகத்தில் வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்காமல் ராணுவ வீரரை சரமாரியாக தாக்கிய இருவர் கைது.!

0 2668

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, முன்னாள் ராணுவ வீரர் நடத்தி வரும் ஆவின் பாலகத்தில் வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றதோடு, பணம் கேட்ட முன்னாள் ராணுவ வீரரை சரமாரியாக தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

முன்னாள் ராணுவ வீரரான செல்வம் மாதையன் குட்டை பேருந்து நிறுத்தத்தில் ஆவின் பாலகம் நடத்தி வருகிறார். கடந்த 27ம் தேதி இவரது கடைக்கு வந்த அமுதன், பப்பு குமார் ஆகியோர் வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர்.

பொருட்களுக்கான பணத்தை கொடுத்துவிட்டு செல்லுமாறு செல்வம் கூறியதால், இருவரும் சேர்ந்து செல்வத்தை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினர்.

இக்காட்சிகள் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில், செல்வம் அளித்த புகாரின் பேரில், கட்டிடத் தொழிலாளிகளான அமுதன், பப்பு குமாரை போலீசார் கைது செய்தனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments