ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உக்ரைனில் இருந்து 40 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்- ஐ.நா.

0 1463

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உக்ரைனில் இருந்து 40 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறியதாக ஐ.நா. அகதிகளுக்கான முகமை தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 6-வது வாரத்தை எட்டிய நிலையில் உணவு, உறவிடம், உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளின்றி அண்டை நாடுகளுக்கு மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.

உக்ரைனில் இருந்து வெளியேறும் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் அண்டை ஐரோப்பிய நாடுகளான போலந்து, மால்டோவா, ஹங்கேரி, ரூமேனியா, உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமைடைந்து வருகின்றனர்.

ஐ.நா. அகதிகள் முகமையின் குழு உக்ரைனில் முகாமிட்டு நிலைமை குறித்து விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments