குடும்பத் தகராறில் 70 வயது முதியவரை அடித்துக் கொலை செய்ததாக 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது

0 1628
மயிலாடுதுறை அருகே குடும்பத் தகராறில் 70 வயது முதியவரை அடித்துக் கொலை செய்ததாக 3 பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை அருகே குடும்பத் தகராறில் 70 வயது முதியவரை அடித்துக் கொலை செய்ததாக 3 பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிள்ளியூரைச் சேர்ந்த 70 வயதான சித்திரன் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிச்சைக்கண்ணு, பாலமுருகன் ஆகியோருக்கும் இடையே நீண்ட காலமாக குடும்பப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. 10ஆம் வகுப்பு படித்து வந்த சித்திரனின் கடைசி மகன் செவ்வாய்கிழமை அன்று பள்ளிக்குச் செல்லவில்லை என்று கூறப்படும் நிலையில், சித்திரன் அவனை திட்டியுள்ளார்.

ஆனால் குடிபோதையில் தங்களைத்தான் அவர் திட்டுவதாக எண்ணி, பிச்சைக்கண்ணு மற்றும் பாலமுருகன் குடும்பத்தினர் 5 பேர் ஒன்று சேர்ந்து சித்திரனை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சித்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து 3 பெண்கள் உட்பட தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments