கன்னியாகுமரியில் சுற்றித் திரிந்த ரஷ்ய சிறுவன் பத்திரமாக மீட்பு

0 12990

கன்னியாகுமரியில் சுற்றித்திரிந்த ரஷ்யாவைப் பூர்வீகமாக கொண்ட  சிறுவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ரஷ்யாவின் அருகிலுள்ள எஸ்தோனியாவை சேர்ந்த ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் தங்கிய அவர் இந்திய பெண்ணை மணம் செய்து கொண்டுள்ளார். 7 ஆம் வகுப்பு படிக்கும் அவர்களது மகன் மீலமாதவா வீட்டை விட்டு வெளியேறி ரயில் மூலம் கன்னியாகுமரி வந்துள்ளான்.

அங்கு பல இடங்களை சுற்றி பார்த்த போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கலைச்செல்வி என்ற பெண் காவலர் அழைத்து விசாரித்த போது வீட்டை விட்டு வெளியேறி இருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரையின் பேரில் அந்த சிறுவனின் பெற்றோரை கோட்டார் காவல்நிலையத்துக்கு வரவழைத்து சிறுவன் ஒப்படைக்கப்பட்டான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments