சென்னையில் ஓய்வுபெற்ற நீதிபதியின் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு.!

0 1856

சென்னையில் ஓய்வுபெற்ற நீதிபதியின் வீட்டில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நகை, பணம் திருடப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அண்ணாநகரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம், 15 ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அண்ணாநகர் சாந்தி காலனியிலுள்ள வீட்டைப் பூட்டி வைத்துவிட்டு 4 மாதங்களாக பூந்தமல்லியிலுள்ள மற்றொரு வீட்டில் வசித்து வருகிறார்.

அண்ணாநகர் வீட்டை அடிக்கடி வந்து பார்த்து விட்டு செல்லும் ஞானப்பிரகாசம், செவ்வாய்கிழமை காலை வழக்கம்போல வந்து பார்த்த போது, பின்பக்க இரும்பு கேட்டின் பூட்டும், கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, 5 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments