சம்பள பாக்கியை கொடுக்கும் வரை முதலீடு செய்வதற்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு தடை விதிக்க கோரி நடிகர் சிவகார்த்திகேயன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!

0 3455

4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை கொடுக்கும் வரை, நடிகர்கள் விக்ரம் மற்றும் சிம்பு படங்களில் முதலீடு செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு தடை விதிக்க கோரி நடிகர் சிவகார்த்திகேயன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தான் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' படத்திற்கு ஞானவேல் ராஜா 15 கோடி ரூபாய் சம்பளம் பேசிய நிலையில், இதுவரை 11 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளதாக சிவகார்த்திகேயன் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த தொகைக்கு பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் தொகையான 91 லட்ச ரூபாயை வருமான வரித்துறையிடம் செலுத்த ஞானவேல்ராஜாவிற்கு உத்தரவிடவும் அவர் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை அடுத்து, சிவகார்த்திகேயனின் மனுவை மார்ச் 31ஆம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி கூறினார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments