மதுரை காமராஜர் பல்கலை.,க்கு புதிய துணை வேந்தராக பேராசிரியர் ஜெ.குமார் நியமனம்.!

0 1666

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக பேராசிரியர் ஜெ.குமாரை நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என் ரவி உத்தரவிட்டுள்ளார்.

புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி தலைமையிலான தேடல் குழு நியமிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த குழு, புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான 3 பேர் கொண்ட பட்டியலை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் சமர்ப்பித்தது. இதனையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக தற்போது பணியாற்றி வரும் ஜெ.குமாரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக ஆளுநர் நியமித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments