திருச்சியில் தீப்பிடித்து எரிந்த மாருதி எர்டிகா கார் - உயிர் தப்பிய 6 பேர்

0 1537

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், அதில் பயணம் செய்த 6 பேர் சரியான நேரத்தில் வெளியேறி லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டு மாருதி எர்டிகா காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்த திண்டுக்கல்லை சேர்ந்த ராக்கேஷ் மற்றும் அவரது குடும்பத்தார், சிறுகனூர் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையல் சாலையில் சென்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை எழுந்ததாக கூறப்படுகிறது. காரை நிறுத்தி என்னவென்று பார்ப்பதற்குள் திடீரென அங்கிருந்து தீ எழும்பி மளமளவென பரவியதாக கூறப்படுகிறது.

உடனடியாக காரில் இருந்த 2 குழந்தைகள் உட்பட அனைவரும் வெளியேறிய நிலையில், தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.இருப்பினும் கார் முளுவதுமாக தீயில் கருகியது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments