அடுத்த ஒரு மாதத்திற்கு ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 2.0. நடத்த வேண்டும் - டி.ஜி.பி. சைலேந்திரபாபு

0 3615
அடுத்த ஒரு மாதத்திற்கு ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 2.0. நடத்த வேண்டும் - டி.ஜி.பி. சைலேந்திரபாபு

தமிழகம் முழுவதும் அடுத்த ஒரு மாதத்திற்கு ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 2.0.நடத்த வேண்டும் என காவல்துறையினருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

போதை பொருள் விற்பனை சங்கிலியை உடைக்க மொத்த கொள்முதல் மற்றும் விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கல்வி நிலையங்கள் அருகே போதைப் பொருள் விற்பனை செய்வதை தடுத்து, போதைக்கு அடிமையான மாணவர்களை மனநல ஆலோசகரிடம் அனுப்பி அதிலிருந்து மீட்க, பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களை கொண்டு வாட்ஸ் ஆப் குழு ஒன்றை உருவாக்கி, ரகசிய தகவல் சேகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநில போலீசாருடன் இணைந்து கஞ்சா செடி ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும், மேலும் பார்சல் மூலமாக போதை மருந்துகள் விற்பனை செய்பவர்களை கண்காணிக்க தனிப்படை அமைக்கவும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments