திருவாரூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 300 நெல் மூட்டைகள், தார்ப்பாய்களை கிழித்து மர்மநபர்கள் அட்டூழியம்

0 1143
திருவாரூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 300 நெல் மூட்டைகள், தார்ப்பாய்களை கிழித்து மர்மநபர்கள் அட்டூழியம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மற்றும் உபகரணங்களை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

மகாராஜபுரத்தில் தற்காலிகமாக இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 4ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு அதன்மேல் தார்பாய்கள் போர்த்தி மூடி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மர்மநபர்கள் சிலர் 300 நெல் மூட்டைகளை கிழித்தும் தார்ப்பாயினை சேதப்படுத்தியும் அலுவலகங்களில் உள்ள நெல் சுத்தம் செய்யும் லோயர் மிஷின் எடை மேடை உள்ளிட்ட உபகரணங்களை சேதப்படுத்தியும் உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments