நீரஜ் சோப்ராவிற்கு பத்மஸ்ரீ விருதினை வழங்கினார் குடியரசுத் தலைவர்

0 5835

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருதினை வழங்கினார்.

இந்தாண்டிற்கான பத்ம விருதுகள் முதற்கட்டமாக கடந்த 22ஆம் தேதி 54 பேருக்கு வழங்கப்பட்டன. இதனை அடுத்து, எஞ்சிய நபர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லி ராஷ்டிரபதி பவனில் இன்று நடைபெற்றது. மறைந்த முன்னாள் ஆளுநர் கல்யாண் சிங்கிற்கு அறிவிக்கப்பட்ட பத்ம விபூஷண் விருதினை அவரது மகன் பெற்றுக்கொண்டார்.

பாரத் பயோடெக் மேலாண் இயக்குநர் கிருஷ்ணா எல்லா, இணை இயக்குனர் சுசித்ரா எல்லாவிற்கு குடியரசுத் தலைவர் பத்மபூஷன் விருதினை வழங்கினார்.

பாடகர் சோனு நிகாம், பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, தவில் இசைக்கலைஞர் முருகையன் ஆகியோருக்கும் குடியரசுத் தலைவர் பத்மஸ்ரீ விருதினை வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments