பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமாரை இளைஞர் ஒருவர் தாக்கியதால் பரபரப்பு

0 3544
பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமாரை இளைஞர் ஒருவர் தாக்கியதால் பரபரப்பு

பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதீஷ்குமாரை பொது நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் நடைபெற்றது.

தனது சொந்த ஊரான பக்தியார்பூருக்கு சென்ற நிதீஷ் குமார், அங்குள்ள சுதந்திர போராட்ட தியாகி ஒருவரின் சிலைக்கு மரியாதை செலுத்தவிருந்தார். அப்போது, நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில், யாரும் எதிர்பாராவிதமாக முதலமைச்சரின் தனிப்பாதுகாவலர்கள் நிறைந்த பகுதியில் நுழைந்த அந்த இளைஞர், வேகமாக சென்று நிதீஷ் குமாரின் முதுகில் தாக்கினார்.

இதனை அடுத்து, அந்த இளைஞரை பிடித்த தனிப்பாதுகாவலர்கள் இழுத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments