வாட்ஸ் அப் குழு அமைத்து போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்து வந்த 3 பேர் கைது

0 1924
வாட்ஸ் அப் குழு அமைத்து போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்து வந்த 3 பேர் கைது

சென்னையில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை சேர்த்து வாட்ஸ் அப் குழு அமைத்து டெல்லியில் இருந்து பார்சல் மூலம் போதை மாத்திரைகள் வாங்கி விற்பனை செய்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

போதை மாத்திரை விற்பனை தொடர்பாக தீபக் குமார் என்பவரை கைது செய்த போலீசார், அவர் அளித்த தகவலின் அடிப்படையில் மேலும் 2 பேரை கைது செய்தனர். இதனை அடுத்து, அவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 50 அட்டைகளை கொண்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

மேலும், 4 ஏர்கன் ரக துப்பாக்கிகள், கத்தி உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்த போலீசார் ஆயுதங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் போதை மருந்து விற்பவர்களுக்கு சட்டவிரோதமாக கூரியர் மூலமாக அதனை அனுப்பும் டெல்லி கும்பலை பிடிக்க காவல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments