தாயை இழந்த சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தவன் கைது

0 5213
தாயை இழந்த சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தவன் கைது

மதுரையில் தாயை இழந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தவன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்.

திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் பகுதியில் விழாக்களுக்கான ஸ்பீக்கர் செட் தொழில் நடத்தி வரும் 38 வயது வீரணன் என்பவனிடம், அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியின் தந்தை, ஆன்லைன் கல்விக்காக எந்த போன் வாங்கினால் சரியாக இருக்கும் என கேட்டதாகவும், அந்த போனுக்கான சிம் கார்டை அவனிடம் இருந்தே வாங்கி தன் மகளுக்கு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட வீரணன், சிறுமியின் கல்வி தொடர்பாக உதவுவதை போல பழகி, அந்த எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் சாட் செய்து ஆசைவார்த்தை கூறி நாளடைவில பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த தந்தை இருவரையும் கண்டித்ததாக கூறப்படும் நிலையில், வீரணன் குறித்து கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments